நிரந்தர குடிநீர் வசதி தொடர்பான விசேட கலந்துரையாடல்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தேவிபுரம் மற்றும் இரணைப்பாலை கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான நிரந்தர குடிநீர் வசதி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதியம் 02.30 மணிக்கு இடம்பெற்றது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கலந்துரையாடலில் 100 க்கு மேற்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய பயனாளிகள் கலந்து கொண்டு தமது இடர்பாடுகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

மக்களின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த குடிநீர் ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.