காட்டு யானை தாக்கி இளைஞர் 21 வயது இளைஞர் மரணம்!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், தமன்கடுவை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காட்டு வழியாக வயலுக்குச் சென்ற இளைஞரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தமன்கடுவையைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று விசாரணைகளை நடத்தி வரும் தமன்கடுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.