அமெரிக்கா சென்ற இலங்கை பிரதிநிதிகள் குழு நாடு திரும்பியது

அமெரிக்காவின் வரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டிற்கு சென்ற இலங்கை பிரதிநிதிகள் குழு நாடு திரும்பியுள்ளது.
இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதித்துறை பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க பிரதிநிதியுடன் மீண்டும் ஒருமுறை இந்த வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறினார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பான பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இலங்கை இணைந்து வெளியிடும் கூட்டு அறிக்கை குறித்து இந்த செய்தியாளர் சந்திப்பில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.