யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் வசித்த வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இரண்டு வைத்தியர்கள் வசித்து வந்த வீடு ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி காலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குண்டு தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, வீடு மற்றும் பொருட்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோல் மற்றும் ஏனைய பொருட்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வீட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிலருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப்பிரச்சனை காரணமாக வைத்தியரை பயமுறுத்துவதற்காக இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.