பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முற்பணக் கொடுப்பனவு.

கடும் காற்று, மழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 30.08.2020 அன்று இடம்பெற்ற கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட  11 வீடுகளுக்கான முற்பணக் கொடுப்பனவு மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால்  வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் 09.09.2020ம் திகதி காலை 9.30மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பயிற்சி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.க.உமாமகள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மேற்கைச் சேர்ந்த 09 குடும்பங்கள், முள்ளிவாய்க்கால்  கிழக்கு மற்றும் வடக்கை சேர்ந்த தலா ஒவ்வொரு குடும்பங்களுமாக  பாதிக்கப்பட்ட 11 வீடுகளுக்கான காசோலைகளை வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சி.சர்மினி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார், அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.