புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி  பாராட்டு விழா.

தில்லித் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் கலையரங்கத்தில் 26.06.2023 அன்று மாலை  புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி, முனைவர் திரு.வி.முத்து அவர்களுக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி  பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. இரா. முகுந்தன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதுடன்,திரு.வி. முத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை நிறுவனர்-தலைவர் மா.கருண், புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர் பாவலர் திரு சீனு. மோகன்தாஸ், பொருளாளர் திரு. மு. அருள்செல்வம்,  தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா. துரைமுருகன், பஹ்ரைன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ஹரிஹரன், தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனர் திரு. உடையார் கோவில் குணா,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைமாமணி திரு வி.முத்து அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு ரங்கநாதன் விழாவை சிறப்பாக நெறியாள்கை செய்ததுடன், நன்றியுரையும் ஆற்றினார்.

நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் திரு.பாலமூர்த்தி மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.