மட்டக்களப்பில் கோர விபத்து: 9 பேர் மரணம் : பலர் வைத்தியசாலையில் அனுமதி. (Updated)

பொலன்னறுவையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் ஒன்று மணம்பிட்டியவில் மரப்பாலத்தை உடைத்து ஆற்றில் கவிழ்ந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு – கதிரவெளியிலிருந்து அக்கறைப்பற்றிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.