மகளின் கண் முன்னால் தந்தை சுட்டுக்கொலை!

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

“துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள மூவர் வருகை தந்ததுடன், அதில் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டின் அறையொன்றுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த அறையில், சிறுமி ஒருவர் கல்வி கற்றுக் கொண்டிருந்தவேளையில், உள்நுழைந்தவரைக் கண்டு கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது வீட்டின் உரிமையாளரான சிறுமியின் தந்தை பின்வாசல் வழியாகச் சென்று பார்த்தபோது, குறித்த நபரை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.” – என்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.