சர்வகட்சி மாநாடு: சஜித் கட்சியின் முடிவு இன்றல்ல நாளை – ஜேவிபி பங்குபற்றாது!

ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் நாளை (26) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதா? இல்லையா? என்ற விஷயத்தில் நாளை 26ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காது என ஜே.வி.பி.யின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் மற்றும் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படும் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சர்வகட்சி கூட்டம் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி (நாளை புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.