காட்டு யானை தாக்கி இன்றும் இருவர் சாவு.

காட்டு யானைகள் தாக்கி இன்றும் (29) இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இக்கிண்ணியாகலை – கெஹெல்எல்ல பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, பரகஹகலே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹந்துங்கொட , ஹிம்பிலியாகொட பகுதியில் சைக்கிளில் பயணித்த 69 வயதுடைய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றும் (28) வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.