பள்ளத்தில் பாய்ந்தது கார் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பரிதாப மரணம்.

கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும், இலங்கைப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கைப் பெண் 51 வயதுடையவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.