யாழில் வீடொன்றின் மீது வன்முறைக் கும்பல் அட்டூழியம்!

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அந்தக் கும்பல் தீக்கிரையாக்கியுள்ளது.

கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்குப் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பிந்திய இணைப்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.