அடுத்த தேர்தலில்பொதுஜன பெரமுன தோற்கும்! – சம்பிக்க சுட்டிக்காட்டு.

“2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும்.”

இவ்வாறு 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் சம்பிரதாய கட்சிகளுக்கு மக்கள் எழுச்சியுடன் முடிவு கட்டப்பட்டுள்ளது. அக்கட்சிகளின் உறுப்பினர்கள் என்னதால் நினைத்தாலும் மக்கள் ஆணை இனி கிடைக்கப்போவதில்லை. 2022 ஜூலை 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமல்ல சம்பிரதாய கட்சிகளும் அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டன. எதிர்க்கட்சியும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை. இதனால்தான் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை. 2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் மொட்டுகி கட்சிக்கும் ஏற்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.