11 பேரை காவு வாங்கிய பயங்கர விபத்து.. 12 பேர் படுகாயம்

ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த குழுவினர் ஆன்மிக பயணமாக ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு பேருந்து ஒன்றில் சென்றனர். அப்போது பரத்பூர் அருகே லக்கன்பூரில் அதிகாலை 4.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் சென்றபோது பேருந்து பழுதாகி நின்றது.

அப்போது சாலையில், பேருந்துக்கு பின் பகுதியில் சில பயணிகள் நின்றுகொண்டிருந்தனர். இதனை அறியாமல் வேகமாக வந்த லாரி கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 11 பேரில் 5 பேர் ஆண்கள், 6 பேர் பெண்களாவர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.