யாழ். பல்கலையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வு அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் தியாக வரலாற்றுப் பேருரை இடம்பெற்றது.

அதன்பின்னர் திலீபனின் திருவுருவப் படத்துக்கு ஈகைச் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.