யாழில் பஸ் தீக்கிரை! – பொலிஸார் தீவிர விசாரணை (Photos)

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டை, சாவல்கட்டுப் பகுதியில் குறித்த பஸ், உரிமையாளரின் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.