இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கடன்: கால தாமதமாகலாம் என்கிறது ஐ.எம்.எப்.

“இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் கால தாமதமாகலாம்.”

இவ்வாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீற்றர் புருவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டாவது தவணைக் கடன் எப்போதும் வழங்கப்படும என்பது குறித்து நிலையான கால அட்டவணை எதனையும் தெரிவிக்க முடியாது.

இலங்கை இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிட்டது.

நாங்கள் திருப்தியடைவதற்கு இரண்டு விடயங்கள் அவசியம். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், கொள்கைள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் நாங்கள் இணக்கப்பாட்டை எட்டவேண்டும் அதுவே நாங்கள் முன்னேறிச் செல்ல உதவும். அதன் மூலமே நாங்கள் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

ஆகவே, ஒரு விடயத்தில் ஒரு வருடத்தில் குறைபாடுகள் உள்ளதை நாங்கள் காணமுடிகின்றது. அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.