மக்களை யார் பாதுகாப்பது? – சாணக்கியன் ஆதங்கக் கேள்வி.

“கொலை மிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி பதிவிட்ட பல இளைஞர்களுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ள போதிலும், சனல் 4 குற்றம் சாட்டியுள்ள ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.