A/L பரீட்சை திகதிகள் குறித்து சில தினங்களில் அறிவிப்பு!

2023 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் என்று கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்து.

எனினும், உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டிருந்த திகதிகளில் நடைபெறாது எனவும், பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சை பிற்போடப்பட்டது எனவும் கல்வி அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.