மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டணத்தை பிரிட்டன் அதிகரிக்கிறது.

இங்கிலாந்து அரசு மாணவர் மற்றும் பயணிகள் விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விசா கட்டணப்படி மாணவர் விசாவுக்கு 490 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 49,500 செலுத்த வேண்டும்.

ஆறு மாத காலத்துக்குட்பட்ட பயணிகள் விசாவுக்கு 115 பிரிட்டன் பவுன்டு அதாவது சுமார் ரூ. 11,600 செலுத்த வேண்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஜூலை மாதம் இந்த உயர்வு பற்றி அறிவித்ததுடன், பொதுத்துறைகளில் உயர்த்தப்பட்ட சம்பள விகித செலவுகளை சரிக்கட்ட கட்டண உயர்வு அவசியம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.