“ஒரு கட்டத்தில் நிதிநிலையை கண்டு பயந்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நிதிநிலையைப் பார்த்து, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என ஒரு கட்டத்தில் தான் பயந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் 30 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர், திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியுமா எனவும், அது சாத்தியமா எனவும் தன்னுடன் இருந்தவர்களே சந்தேகம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், கட்சி பாகுபாடின்றி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், கோரிக்கையை நிறைவேற்றியதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூட நன்றி தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார். திமுக அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.