இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில் மூடல்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திற்கான நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வித்தியா மாவத்தையில் இருந்து மேட்லண்ட் பிளேஸிற்கான பிரவேசம் முடக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தைத் தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பத்தரமுல்லை சீலரத்ன தேரர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.