ரூ.400 கோடி மதிப்புள்ள வாகனங்கள் சிஐடியின் கருப்பு பெட்டியில் வைப்பு.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/11/traffic_0_0.jpeg)
400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 432 அதிநவீன சொகுசு வாகனங்களுக்கு மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குழு போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளதுடன், அவற்றைப் பதிவு செய்வதற்கான பாரிய மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பல சக்திவாய்ந்த நபர்கள் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதை பாணந்துறை ஊழல் தடுப்பு பணியகம் முதலில் கண்டறிந்தது.