இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ஐசிசி இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் ஐ.சி.சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சபை நேற்று (10) இரவு அறிவித்தது.

நேற்று கூடிய ஐ.சி.சி சபை, ஸ்ரீலங்கா கிரிக்கட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை, குறிப்பாக, அதன் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டிய தேவையை கடுமையாக மீறுவதாக தீர்மானித்துள்ளது.

ஐசிசி தனது அறிக்கையில், “இடைநீக்கத்தின் நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால் சரியான நேரத்தில் தீர்மானிக்கப்படும்” என்று கூறியது.

ஐசிசி வாரியம் நவம்பர் 21 ஆம் தேதி கூடுகிறது, அதன் பிறகு எதிர்கால நடவடிக்கை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.