புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் 5 மாணவர்கள் 198 புள்ளி பெற்று சாதனை.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய 5 மாணவர்கள் 198 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்து ஒரு மாத காலத்துக்கு அதற்கான பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி கூற வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுபேறுகளின் அடிப்படையில் 198 புள்ளிகளை 5 மாணவர்களும், 197 புள்ளிகளை 4 மாணவர்களும், 196 புள்ளிகளை 8 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

கல்வி மறுசீரமைப்புக்கான அனுமதி கிடைக்கப் பெறும் போது, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.