ஆறு வயது சிறுமி பரிதாபச் சாவு!

ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரலிய, இலுக்பொத்தவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெற்றோருடன் ஓய்வெடுக்க வந்த வேளையில் நேற்று நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த தனேஷி ஆருத்யா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.