‘ஹரக் கட்டா’வுக்கு உதவிய முன்னாள் இராணுவச் சிப்பாய் சிக்கினார்!

‘ஹரக் கட்டா’வைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் இருந்து விடுவிப்பதற்கான திட்டத்தைத் தீட்டிய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை, கொடகம பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 33 வயதான முன்னாள் இராணுவச் சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.