வெள்ளவத்தையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு!

கொழும்பு, வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து நேற்று (21) இரவு அந்த இளைஞர் தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் எனவும், அவர் தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளைஞரின் சடலம் அடுக்குமாடிக் குடியிருப்பின் பின் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை இன்று (22) இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.