கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பரந்து செல்லும் சாத்தியம்! விசேட ஸ்கானர் மூலம் பரிசோதனை!! – மேலும் 4 எலும்புக்கூடுகள் மீட்பு (Photos)

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வீதியின் ஊடாகவும், ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி இன்றும் (24) முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வுப் பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அத்துடன் துப்பாக்கிச் சன்னங்களும், குண்டுச் சிதறல்களும் மீட்கப்பட்டன. பேனா மாக்கர் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இன்று விசேட ஸ்கானர் மூலம் இந்தப் புதைகுழி எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது எனப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நாளை (25) அகழ்வுப் பரிசோதனை நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இந்த மனிதப் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும், நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகளை எம்மால் உறுதியாகக் கூற முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.