17 நாட்களுக்கு பின் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்

சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களும், 17 நாள்கள் `பெரும்’ போராட்டத்துக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தயார் நிலையிலிருந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு, மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவருகின்றனர்.

மீட்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்த குழுவுக்கு, மக்கள் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். தங்கள் உறவினர்கள் மீட்கப்பட்டதையடுத்து, மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை சுரங்கத்திற்குள் இருந்து குழாய் வழியாக ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.