காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராமர் பதாகைகள்!

தில்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவகத்திற்கு வெளியே ராமர், சீதை பதாகைகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதோடு அனைத்து மதங்களையும் குறிப்பிடும் வகையிலான பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே தொடர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.