பாதாள உலக தலைவர்களுக்கு இனி சாவுதான் : நாளை முதல் விசேட அதிரடி நடவடிக்கை!

பாதாள தலைவர்கள் இனி மரணத்தை மட்டுமே சந்திக்க நேரிடும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

வைபவம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குற்றக் கும்பலை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வேலையில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். போதை பொருள் கடத்தல்காரர்களைக் காப்பாற்ற எவர் தலையிட்டாலும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். காவல்துறைக்கு ஜூன் 30 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 30க்குள் இந்த நாட்டில் முழுமையான மாற்றம் வர வேண்டும். சில சமயங்களில் சமூக ஊடகங்கள் நம்மை தாக்குவார்கள் . அவற்றைச் செய்வதன் மூலம் எம்மைத் தடுக்க முடியும் என அவர்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.