ரணிலின் , ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அடுத்த மாதம் ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய பத்திரிகையான ‘தேசய’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிமனையின் தலைவருமான சாகல ரத்நாயக்க தேர்தல் பிரச்சார முகாமையாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக ‘தேசய’ செய்தி வெளியிட்டுள்ளது.

அனுர திஸாநாயக்க, திலித் ஜயவீர மற்றும் ஜனக ரத்நாயக்க ஆகியோர் மட்டுமே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.