யாழ்பாணத்தில் சிக்கித் தவிக்கும் பாடகர் ஹரிஹரன் மற்றும் கலைஞர்கள் !

யாழில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சிக்கு வந்துள்ள இந்திய சூப்பர் சிங்கர் ஹரிஹரன் உள்ளிட்ட 11 பாடகர்கள் யாழில் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இம்மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த நாட்களில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் இன்று (17) தீர்மானித்தனர்.

இதன் காரணமாக, ஹரிஹரன் உள்ளிட்டோரை தென்னிந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது, ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்தியா மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமானமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஹரிஹரன் மற்றும் பாடகர்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.