மனைவியுடன் இலங்கை வந்த வெளிநாட்டுப் பிரஜை கடலில் மூழ்கி மரணம்.

இலங்கைக்கு நத்தார் பண்டிகையைக் கொண்டாட வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் காலி – பெந்தோட்டக் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் டிட்டோ வொல்லோவ் என்ற 51 வயதான கஸகஸ்தான் பிரஜையாவார்.

இவர் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்த நிலையில் இருவரும் பெந்தோட்டவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர் தனது மனைவியுடன் பெந்தோட்டக் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.