விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: கண்ணீர் மல்கப் பிரியா விடை கொடுக்கும் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்கப் பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.30 மணியளவில் அவரது உயிர்ப் பிரிந்தது.

இவரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

விஜயகாந்த்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்ய உள்ளது.

இறுதிச்சடங்கில் தமிழகரசு சார்பில் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் தேமுதிக கட்சிக் கொடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் மத்தியில் கண்ணீருடன் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது

Leave A Reply

Your email address will not be published.