ஈழத்தின் இசைக்குயில் கில்மிஷாவை நேரில் சென்று வாழ்த்திக் கௌரவித்த சிறீதரன் எம்.பி.

ஈழத்தின் இசைக்குயில் கில்மிஷாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று நேரில் சென்று வாழ்த்திக் கெளரவித்தார்.

தன் இசையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத் தமிழர்களின் அடையாளமாக இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசை நிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்று நாடு திரும்பிய கில்மிஷாவை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று நேரில் சென்று வாழ்த்தினார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டில் நடந்த இந்த நிகழ்வில், கில்மிஷாவின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.