யாழில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற இளைஞர் ஒருவர் கைது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்கின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இளைஞரைக் கைது செய்தனர்.

அந்த இளைஞரைச் சோதனையிட்டபோது, அவரது உடமையில் இருந்து சுமார் 7 கிலோ மாவா பாக்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.