பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் போராட்டம்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தைச் சிற்றூழியர்கள் முன்னெடுத்தனர்.

வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.