அயோத்தி கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை: 11 நாள் விரதத்தைத் தொடங்கிய பிரதமா் மோடி

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை ஜன. 22-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முதல் 11 நாள் விரதத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கியுள்ளாா்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறாா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் 11 நாள்களுக்கு விரதத்தை பிரதமா் மோடி தொடங்கினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘பல தலைமுறையினரின் மனதில் உறுதியாக சுமக்கப்பட்டு வந்த கனவான ‘ராமா் கோயில்’ நனவாக இருப்பதை எண்ணும்போது நான் உணா்ச்சிவசப்படுகிறேன்.

நான் அனுபவிக்கும் மகிழ்ச்சியை உணர முடியுமே தவிர, வெளிப்படுத்த முடியாது. எனது உணா்ச்சியின் ஆழம் மற்றும் தீவிரத்தை வாா்த்தைகளால் விவரிக்க முடியாது.

ராம ஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் வரலாற்று நிகழ்வு இந்தியா்களுக்கும் ராம பக்தா்களுக்கும் புனிதமான தருணமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு நான் சாட்சியாக இருப்பது எனது பாக்கியம்.

பிராண பிரதிஷ்டைக்கு அனைத்து இந்தியா்களின் பிரதிநிதியாக கடவுள் என்னைத் தோ்ந்தெடுத்து இருக்கிறாா்.

பிராண பிரதிஷ்டைக்கு முன்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மனதில்கொண்டு, 11 நாள்களுக்கு விரத நடைமுறைகளைத் தொடங்குகிறேன்.

எனது ஆன்மிகப் பயணத்தில் தலைசிறந்த மகான்களிடம் இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இதனை மேற்கொள்கிறேன். என்னை ஆசீா்வதிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், வனவாசத்தின்போது ராமா் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்ட பஞ்சவடியிலிருந்து (நாசிக்கில் உள்ளது) விரத வழிபாட்டைத் தொடங்குவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். ராமா் மீது எப்போதும் பக்தி கொண்ட தனது தாயையும் தனது பதிவில் அவா் நினைவுகூா்ந்தாா்.

தன்னுடைய பரபரப்பான பணிகளுக்கு இடையேயும் பாரம்பரிய முறையில் பின்பற்றப்பட வேண்டிய கடுமையான விரத வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற பிரதமா் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.