வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் வகுப்பறை உடைத்து திருட்டு! – சி.சி.ரி.வி. கமராவில் சிக்கிய சிறுவன். (Photos).

வவுனியா, தாண்டிக்குளம், பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் நேற்று கண்டறியப்பட்ட நிலையில், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நேற்று மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 3.29 மணியளவில் 15 வயது மதிக்கத்தக சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியைத் தூக்கிக் செல்வது சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளது. சி.சி.ரி.வி. காட்சியின் உதவியுடன் அந்தச் சிறுவனைக் கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.