மஸ்கெலியா தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தை! (Photo)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள வேலிப் பகுதியில் இனந்தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.

இதைக் கண்ட தோட்ட பங்களா தோட்டத் தொழிலாளி உடனடியாக நிர்வாக அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

நிர்வாக அதிகாரி நல்லதண்ணி வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து நல்லதண்ணி வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இடத்துக்கு வருகை சிறுத்தையை மீட்டனர் என்று மஸ்கெலியா தோட்ட காரியாலய அதிகாரி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.