யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

https://we.tl/t-slBH3Lpr1n

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அதன் அடையாளமாக நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்புத்தெரிவித்தே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.