வடக்கு மாகாணத்துக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்! – ஆளுநரிடம் தூதுவர் உறுதி.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆளுநரால் இந்தியத் தூதுவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி புரியும் எனத் தெரிவித்த தூதுவர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.