சம்பந்தன், கஜேந்திரகுமார் உட்பட 10 பேரைச் சந்தித்த இந்தியத் தூதுவர் : விக்கி, சித்தர், செல்வம் மிசிங்

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் இன்று (22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்நாள் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் எம்.பி., அந்த அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை. மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்களை அறியமுடியவில்லை.

More News

மீண்டும் கூட்டமைப்பாக நாம் ஒன்றிணைவோம்! தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் பகிரங்க அழைப்பு.

தீர்வு விடயத்தில் வலியுறுத்தலை மட்டுமே எம்மால் வழங்க முடியும்! – தமிழ்க் கட்சிகளிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு.

தமிழ் மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள் தன்னிடம் ஆசி பெற்ற சிறீதரனிடம் சம்பந்தன் எம்.பி. இப்படி தெரிவிப்பு.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை (புகைப்படங்கள்)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ரான் டிசாண்டிஸ் வெளியேறினார்.

நாரம்மல சம்பவம் குறித்து அமைச்சர் திரன் அலஸ் கண்டனம்.

உயர்தரத்தை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய திட்டம்.

அயோத்தி ராமா் கோயிலில் 84 வினாடி முகூா்த்த காலம்

சமன் பெரேரா பெலியத்தையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.