பிக்குவை சுட்டுக் கொன்றவகள் தப்பித்து செல்லும் போது வாகனத்தை எரித்துள்ளனர்…

கம்பஹ, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் கொலையாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், கடுவெல பிரதேசத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பிக்கு குறிப்புகள் பார்ப்பவர் என தெரியவருகிறது.

கடுவெல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கொலையாளிகள் , கொலை சம்பவத்துக்காக பயன்படுத்திய காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

45 வயதுடைய பிக்கு ஒருவர் இனந்தெரியாத நால்வரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.