செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரை சேர்ந்தவர் மாதவன் (55), கம்பிக் கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்த மகன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் இவரது கடைசி மகன் சதீஷ்குமார் (30) பி.இ.பட்டதாரி. அயல்நாட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய சதீஷ்குமார் சிறிது காலம் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது அண்ணன் மஞ்சள் காமாலை தாக்கி இறந்துள்ளார். அது முதல் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை வருடமாக சொந்த ஊர் பரம்பூருக்கு வந்து தந்தை நடத்தி வரும் இரும்புக் கடையில் அவருக்கு துணையாக இருந்துள்ளார். மேலும், மனநலம் பாதிப்புக்கு மாத்திரை உண்டு வந்த அவர் சில நாள்களாக மாத்திரை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த தந்தை மாதவனிடம் இன்று காலை செலவுக்கு பணம் கேட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். தர மறுத்த தந்தையை அவர் அருவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

இதற்கு பயந்து வீட்டில் இருந்து வெளியே சாலைக்கு ஓடி வந்த மாதவனை துரத்தி வந்து சதீஷ்குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு வீட்டுக்குள் போய் அமர்ந்து விட்டார்.

மகனே தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் பரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த அன்னவாசல் காவல் துறையினர் குற்றவாளி சதீஷ் குமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

சாந்தன் இலங்கை வருவதற்கு உதவுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தாயார் வேண்டுகோள்.

புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றும் குடியரசுத் தலைவர்!

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?: உயா்நீதிமன்றம் கேள்வி

மோடி ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை!: ராகுல் காந்தி

நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஜப்பான்.

செலவுக்கு பணம் கொடுக்காத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

Leave A Reply

Your email address will not be published.