மூளை நரம்பு வெடித்து மன்னார் இளைஞர் சாவு – ஐஸ் போதைப்பொருள் பயன்பாடே காரணம்.

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மன்னார், பேசாலையைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மூளை நரம்பு வெடித்தமை காரணமாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியாமையால் இந்த நிலைமை ஏற்பட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.