குடலில் கிருமித் தொற்றால் இளம் தாய் பரிதாப மரணம்.

குடலில் கிருமி பரவலால் மாதகலைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 31ஆம் திகதி குழந்தை இறந்த நிலையில் இவருக்குப் பிறந்துள்ளது. தாயாரின் உடல் நிலையும் தொடர்ச்சியாக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் குடலில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.