மரக்கிளை முறிந்து வீழ்ந்து 14 வயது மாணவன் பரிதாப மரணம்!

மரம் வெட்டியபோது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் 14 வயது மாணவன் ஒருவர் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட் நியூட்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் முருகன் அஷால் (வயது – 14) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி மாணவன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நண்பகல் சிகையலங்கார நிலையத்துக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே அவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்தது. இதையடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இடைவழியில் உயிரிழந்தார்.

மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் முறையற்ற வகையில் மரம் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது ஜவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.